கல்லில் அமைந்த காவியம்
தொடர்ந்து வெற்றியோ, தோல்வியோ ஏற்படாத நிலையில் பதின்மூன்றாவது நாளில் மகாபாரதத்தில் மிகவும் பதட்டமான சூழ்நிலையை துரியோதன் தன் போர் திட்டத்தினை உருவாக்குகின்றான்.....
சஞ்சத்தகர்களை( தற்கொலை படைக்கு சமமான ரத மாவீரர்கள்) ஏவி , போரில் அனைத்து வியூகங்களையும் துச்சமாக மதித்து முன்னேறிச் செல்லும் பார்த்தனை தடுத்து நிறுத்தி போர் புரிய அனுப்பிவிட்டு, யுதிஷ்டிரனை கைது செய்யும் நோக்குடன் சக்கர வியூகம் ஒன்றை அமைக்க துரோணாச்சாரியார் மூலம் ஏற்பாடுகள் செய்கின்றான்.
இந்த பதிமூன்றாம் நாள் மாகயுத்தத்தின் கதை புருஷனாக வருபவர்கள் ...
பாண்டவர்களை ஒரு நாளேனும் போரில் ஜெயிக்க வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்ற சிந்து மன்னன் ஜெயத்ரதனும் மற்றும் உலக ஜீவன்களை மட்டுமல்லாமல் , மகாபாரதப்போரையும் இயக்கிய உலகநாயகன் கோகுலக்கண்ணனை குருவாகப்பெற்ற அபிமன்யுவும்.
பாண்டவர்களை ஒரு நாளேனும் போரில் ஜெயிக்க வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்ற சிந்து மன்னன் ஜெயத்ரதனும் மற்றும் உலக ஜீவன்களை மட்டுமல்லாமல் , மகாபாரதப்போரையும் இயக்கிய உலகநாயகன் கோகுலக்கண்ணனை குருவாகப்பெற்ற அபிமன்யுவும்.
பல அடுக்குகளாக வட்டவடிவில் சக்கர வியூகம் அமைக்கப்பட்டு விட்டது . அதனை உடைத்து உள்ளே செல்லவில்லை என்றால் தோல்வி நிச்சயம் , அர்ஜுனனோ வெகுதூரத்தில்..... அதை உடைக்கும் திறமைவாய்ந்த வேறு வீரர்கள் இல்லாத நிலையில், கேள்வி ஞானம் மூலமே வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல மட்டும் அறிந்த அபிமன்யு , தன்னைப் பின் தொடர்ந்து வந்து உதவி புரியுமாறு பீமனிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளே நுழைகிறான் . பீமனை நுழையவிடாமல் ஜெயத்ரதன் தடுத்து அபிமன்யுவை சக்கர வியூகத்திற்குள் தனிமைப் படுத்துகின்றான்.
சக்கர வியூகத்தின் கருவிலிருந்த பல அதிரதர்களுடன் போரிட்டு மகா வீரச்செயல் புரிந்த அபிமன்யுவும், இந்த கோர யுத்தத்தை பார்க்க முடியாமல் மேற்கில் சூரியனும் ஒரே சமயத்தில் வீழ்கின்றனர்.....
வியாச முனிவரின் மகாபாரதத்தில் மிக பிரம்மாண்டமான கற்பனைகளுக்கு இடம் கொடுக்கும் இந்த காட்சி எந்தவித மனச்சாயத்தையும் பூசிக் கொள்ளாமல் படிக்கும் அனைவர்க்கும் பெருத்த வியப்பையும், கற்பனைத் தோற்றத்தையும் ஏற்படுத்தும். வியாசரின் இந்த மாபெரும் கற்பனையை எழுத்துக்கள் மூலமாகவோ, ஓவியத்தின் மூலமாகவோ அல்லது திரைப்படங்களின் மூலமாக கொண்டு வந்திருந்தாலும், தன்னுடைய நிகரற்ற ஆற்றலினால் ஒரு சிறு கற்பாறையில் கொண்டு வந்திருக்கும் சிற்பிகளின் திறமையை ஹளபேடு எனும் ஊரிலுள்ள ஹோய்சாளேஸ்வரர் திருக்கோயிலில் சுற்றுச்சுவரில் காணலாம்....
காவியங்களை மனதில் ஏற்றி, மனதில் உள்ள எண்ணங்களை கைகளுக்கு ஊட்டி, கைகளில் உள்ள திறன்களை உளிகளின் மூலம் கற்களுக்கு பாய்ச்சி, தத்துரூபமாக கல்லில் காவியங்களைப் படைத்த சிற்பிகள் இவர்கள்.... அவர்களின் பாதங்களை மன மொழிமைகளால் வணங்கி மகிழ்கிறேன்🙏🙏
No comments:
Post a Comment