Thursday, December 26, 2019

வரலாற்றுப்_பயணங்கள்:24-தாமிர சபை - திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
- திருஞானசம்பந்தர்
தாமிர சபை எனப் பெயர் கொண்டது, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அமைந்துள்ள நடராசர் சன்னிதியாகும்.
ஆருத்திரா தரிசன விழாவின் போது இங்கு நடராசர் மற்றும் சிவகாமியின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சந்தன சபாபதி என அழைக்கப்படும் நடராசர் தாமிர அம்பலத்துக்குப் பின்னால் உள்ளார். சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட இவரைத் தாமிர அம்பலத்தின் வழியாகப் பார்க்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும்.
பஞ்ச சபைகள்:
கனகசபை - சிதம்பரம் நடராசர் கோயில்
வெள்ளி சபை - மதுரை மீனாட்சியம்மன் கோயில்
இரத்தின சபை - திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
தாமிர சபை - திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
சித்திர சபை - குற்றாலநாதர் கோயில்

No comments:

Post a Comment

Popular Posts